எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்!

0

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி அவர்களின் இல்லற வாழ்க்கைஎப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கைசிறப்பாக அமையும் என்று பார்ப்போம்.

ராசி, நட்சத்திரம் பொருத்தம் பார்த்து பத்து பொருத்தமும் சரியாகஇருக்கிறதா என்று ஆராய்ந்துதான் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் எல்லா தம்பதியருமேசந்தோசமாக குடித்தனம் நடத்துவதில்லை.

காரணம் யார் பெரியவர்கள் என்ற ஈகோ மோதலே தம்பதியர்களிடையே பிரச்சினைவர காரணமாகிறது. 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் தங்களின் துணையிடம் அன்பைபொழிவார்கள். யாருடைய காதல் கெமிஸ்ட்ரி ஜெயிக்கும் என்று பார்க்கலாம். நெருப்பு ராசி,நீர் ராசி, காற்று ராசி, நில ராசி என நான்கு தன்மைகள் கொண்ட ராசிக்காரர்கள் உள்ளன.யாருடன் யாரை சேர்க்க வேண்டும் என்று பார்த்து இணைக்க வேண்டும்.

நெருப்பும், காற்றும்
மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம்நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம்நீர் ராசிகள். நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடுகாற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால்மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமணவாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத குணம் இருப்பதால், இவர்களின் வாழ்வில் துன்பங்கள் ஏற்படும். ரிஷபம் நில ராசி,விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தனது துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள்.ஆனால் சிலருக்கு காதல் தோல்வி, திருமண வாழ்க்கை முறிவு ஏற்படும். இவர்கள் ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்து போனால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும். மிதுனம் கடகம்ராசிக்காரர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள்மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்புசெலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.

கடகம்
கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக நினைப்பார்கள். சுதந்திரத்தைஅதிகம் விரும்புபவராக இருப்பார்கள். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் சில நேரங்களில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுபெரும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். தனது துணை மற்றவர்களுடன் பேசுவது அல்லது பழகுவதைவிரும்ப மாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களதுமண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்நிலவும். சிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கைதொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால்,இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கைதுணைகள் பொருத்தமாக இருப்பார்கள். காரணம் கன்னி நில ராசி மகரம் நில ராசி, விருச்சிகம்நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பெண்கள்மற்றும் குழந்தைகள் உதவியாக இருப்பார்கள். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசியில் பிறந்தவர்களும்திருமணம் செய்துக் கொண்டால் பணத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.காரணம் சுக்கிரனின் அதிபதி காதலை உற்சாகப்படுத்துவார். இந்த ராசிக்காரர்கள் மனைவியின்பேச்சைக் கேட்டு நடப்பது நல்லதே நடக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கைசிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும்வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் தனது துணையை மிகவும் விரும்புவதுடன்,தனது துணையை ஒரு காதலியாக நினைத்து சிறப்பாக வாழ்வார்கள். அதனால் தனது துணையை அனைத்துவிதத்திலும் திருப்தியாக வைத்திருப்பார்கள். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள்நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர்புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ரம்மியமானதாக செல்லும்.இந்த ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல்திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது.இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள்.ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும்.இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதல்திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். நிலம் ராசிக்காரர்கள் நீர்ராசிக்காரர்களுடன் திருமண பந்தத்தில் இணையலாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். மிதுனம், துலாம், விருச்சிகம்மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை துணையாகக் கொண்டால், இவர்களின் இல்லற வாழ்க்கைசிறப்பாகும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையானது, இரண்டு திருமணங்கள்நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி வாழ்க்கை அமைந்தால்,இவர்கள் மறுமணம் செய்து கொண்டு சுகத்துடன் வாழக் கூடியவராக இருப்பார்கள். துலாம் காற்றுராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சனையை எப்படி கையாள்வதுஎன்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாதாம்.
Next articleநீங்கள் திருமணம் ஆனவர்களாயின் இந்த விட‌யங்களை மறந்தும் செய்யாதீர்கள்! இதை கொஞ்சம் படியுங்கள்!