நீங்கள் எண் 2 (2, 11, 20, 29) ல் பிறந்தவர்களாயின் உங்களுடைய‌ வாழ்க்கையின் ரகசியம் இது தான்

0

நீங்கள் எண் 2 (2, 11, 20, 29) ல் பிறந்தவர்களாயின் உங்களுடைய‌ வாழ்க்கையின் ரகசியம் இது தான்.

ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என்ற வகையில் இரண்டு என்பது எம் வாழ்வில் ஓர் மிக‌ முக்கியத்துவம் கொண்ட எண்ணாக உள்ளது. 2, 11, 20, 29 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் இரண்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உட்பட்வர்களாவார். இங்கு இரண்டாம்; எண்ணுக்குரிய கிரகம் சந்திரன் மற்றும் இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B, K , R ஆகியவை.

குண இயல்புகள் எவ்வாறு இருக்கும்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதனால், தண்ணீர்; எவ்வாறு நிலையில்லாமல் ஓடுகின்றதோ அதேபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுவதுடன், சுறுசுறுப்பாகவும் செயல்படுபவார்கள். எனினும் இவர்கள் அவசரக்காரர்கள் அல்லர். இவர்கள் எந்தவொரு செயலையும் நன்கு சிந்தித்து செயல்படுவதனால், எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி அதில் வெற்றி காண்பார்கள். இவர்கள் சுயநலமின்றி எதையும் தியாகம் செய்யத் துணிவதனால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்கள் ஏற்படும்.

மேலும், இவர்களுக்கு அதிகளவிலான நினைவாற்றல் அதாவது ஞாபக சக்தி அமையப் பெற்றதனால், இவர்கள் எப்போதும் சற்று குழப்பவாதிகளாகவே காணப்படுவர். எனினும், எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். இவர்களின் இரக்க குணம் இவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும்.

வேடிக்கையாக பேசக்கூடிய தன்மை உடைய இவர்கள் பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதுடன், சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை மற்றும் கடவுள் பக்தி என்பனவற்றை அதிகளவில் கொண்டிருப்பதுடன், பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிகம் கவலைப்படுவார்கள். இவர்கள் பொதுவாக தமது கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள்.

இவர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும், சற்று பயந்த சுபாவம் இவர்களுக்குள் இருக்கும். கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்ட இவர்கள், தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்களாகவும், கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்களாகவும் காணப்படக் கூடிய இவர்களிடம் சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது.

இவர்களிடம் அதிகளவான கலாரசனை காணப்படுவதனால், சங்கீதம், நனடம் மற்றும் நாடகத்துறை போன்றவற்றில் இவர்களிடம் பொதுவாகவே நாட்டம் அதிகம் இருக்கும். எதிலும் தற்காப்புடன் செயல்படும் இவர்கள் பொதுவாக வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். இவர்கள் பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதுடன், பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் உள்ளிருக்கும் பயம் காரணமாக சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்வதற்று வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது மிவும் அவசியம்.

குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும், குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்களாகவும் காணப்படுவர். எனினும், எதிர்பாராமல் சில சமயங்களில்; குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பேசுவதன் மூலம் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள்.

மேலும், இவர்கள் சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் அதிகளவில் செலவு செய்வதுடன், குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு முக்கிய காரணமாக இந்த இரண்டாம் எண்ணில் பிறந்தவரின் குண இயல்பே தான் இருக்கு முடியும். தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்குள் அதிகம் காணப்படுவதனால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. இவர்கள் தமது வீண் பிடிவாத குணத்தை நீக்கி அனைவரையும் அனுசரித்து நடந்து வந்தால் மட்டுமேஅவர்களின் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாகவும் சந்தோசம் மிக்கதாகவும் அமைய முடியும்.

உடல் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் எப்படி

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதனால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய வகையிலான அழகான நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் என அனைத்துமே நன்கு அமையப் பெற்ற உடலமைப்பை கொண்டிருப்பதுடன், மெலிந்த குரலில் பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால் இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி மற்றும் தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவதுடன், சாதாரணமாக இவர்களுக்கு சமிபாட்டு உறுப்புகளும், சிறுநீரகமும் பிரச்சினை கொடுக்கும். இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு அடிமையானால் இவர்களை மீட்கவே முடியாத நிலையில் உயிரையே கூட பறித்து விடும். இதனால், தமது நிலையறிந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது நல்லது.

பொருளதாரம் நிலைமை

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த விதத்திலாவது பணத்தை சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பினும்;, வருமானம் குறைவாக காணப்படுகின்ற காலங்களிலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் அதாவது விரலுக்கு மிஞ்சி வீங்குவதனால் இவர்களிடம் சேமிப்பு குறைவாகவே இருக்கும். பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும் கூட, இவர்களுக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். இவ்வாறாக பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உருவாகும். எனவே, இவர்களைப் பொறுத்த வரையில் எப்போதும் கொடுக்கல் வாங்கலில் அதிகளவு கவனத்துடன் செயறபடுவதே சிறந்தது.

தொழில் அமைப்பு எப்படி

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதனால் இவர்களுக்கு அதிகளவான கற்பனைத் திறன் காணப்படுவதனால், இவர்கள் கதை, வசனம் மற்றும் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். அல்லது, சந்திரன் ஜல ராசி என்பதனால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை மற்றும் தூய நீர் தயாரித்தல் போன்றன இவர்களுக்கு பொருத்தமான தொழில்காக அமைவதுடன் அதவற்றின் மூலம் அதிகளவான வருமானத்தையும் பெறமுடியும். மேலும், அறிவிப்பாளர் தொழிலும் முன்னேற்றம் அளிக்கும்;. வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று உழைக்கக் கூடிய வாய்ப்புகளும் கிட்டும்;. இவர்களில் சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள் மற்றும் பகைவர்களின் நிலை

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்களாதலால், எதிலும் குழப்பவாதியாகவே இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதனால், இவர்கள் யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அவ்வாறு நெருங்கி பழகிவிட்டால் அவர்களை பிரிவது என்பது மிகக் கடினமாகும். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடிய இவர்களுக்கு, இலக்கம் 1 மற்றும் 5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4 மற்றும் 7 போன்ற எண்களில் பிறந்தவர்கள் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் காணப்படுவர்;. இவர்கள் அதிகளவான இரக்க குணமும் இளகிய மனமும் உடையவர்களாதலால்; சில சமயங்களில் நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள்.

சந்திரனுக்குரிய காலம் எது

ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரிய காலமாக அமைவதுடன், திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். மேலம், சந்திரன் இரவில் அதிகளவில் பலம் உடையவன் ஆவான்.

சந்திரனுக்குரிய திசை எது

சந்திரனுக்குரிய திசையாக வடக்கு திசை காணப்படுகின்ற வகையில், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள்; எந்தவொரு செயலையும் ஆரம்பிக்கும் போதும் வடக்கு நோக்கி பிராயணம் செய்து ஆரம்பித்தால், நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட கல் என்ன‌

சந்திரனின் எண்ணான இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள்; அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்வதன் மூலம், உடல் நோய்கள் குறைவடைவதுடன், மன அழுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள் என்ன‌

சந்திரனுக்கு உரிய நாளாக திங்கட்கிழமை அமைவதனால்;, அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்து வருவதுடன், வெங்கடாசலபதிக்கு வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைத்து மன அமைதிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்டம் தருபவைகள்

அதிர்ஷ்டம் தரும் தேதி- 1,10,19,3, 12,21,30

அதிர்ஷ்டம் தரும் நிறம் – வெள்ளை, பொன் நிறம்

அதிர்ஷ்டம் தரும் திசை -தென் கிழக்கு

அதிர்ஷ்டம் தரும் கிழமை -திங்கள், வியாழன்

அதிர்ஷ்டம் தரும் கல் – முத்து, சந்திரகாந்தகல்

அதிர்ஷ்டம் தரும் தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 12-09-2017
Next articleகஞ்சா கலந்த மாவா பாக்கு வைத்திருந்த தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கைது