பிரான்சில் கண்காட்சி பூங்காவில் நடந்த விபத்தில் நபர் ஒருவர் பலியான சோகமான சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் தன் குழந்தைகளுடன் வந்திருந்த நபரே பலியாகியுள்ளார்.
உல்லாச சவாரி செய்யும் இயந்திரத்தின் நடு மையத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
அந்த இயந்திரம் தரை நோக்கி வரும்போது அதில் சவாரி செய்தவர்கள் தூக்கிவீசப்பட்டதாக Neuville-sur-Saone-ன் துணை மேயர் Laurent Buffard தெரிவித்துள்ளார்.
எனினும் இறந்து போன நபர், அதில் பயணம் செய்தாரா அல்லது அருகில் நின்று கொண்டிருந்தாரா என்பதற்கான தெளிவான விளக்கமில்லை, இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: