உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரவல்லது. ஆற்றலை அள்ளித்தரும் அற்புத பழம். சர்க்கரையை குறைத்து, கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.
இது எலுமிச்சையைப் போன்று கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். கிட்டதட்ட 15 முதல் 20 அடி உயரம் வரை இம்மரம் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த மரம் ஒரு புதர் வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் ஏராளமான தாது உப்புக்களும் வைட்மின்களும் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் சிறிதளவு இந்த பழத்தை எடுத்துக் கொள்வதும் மிகப்பெரும் பயனை உங்களுக்கு அளிக்கும்.
சத்துக்கள்
நார்த்தம்பழம் மிக அதிகமாகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால், நாம்பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைவிட, சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் உள்ளதால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
கால்சியம்
உடலுக்குத் தேவையான ஒரு நாளினுடைய கால்சியம் அளவில் 60 சதவீதத்துக்கும் மேலான கால்சியத்தை ஒரு பெரிய சைஸ் நார்த்தம்பழத்தில் இருந்து நம்மால் பெற முடியும். அதனால் தினமும் ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. உக்குளிப்பழம் இரண்டு வீதமான தினமும் தேவைப்படும் மொத்த கால்சியம் கால்சியம் சேமிப்பு உள்ளது.இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.
சிறுநீரகக்கல்
நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம். ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.