இவரா இபப்டி? பொட்டு, புடவை என்று பெண் கெட்டப்பில் முதன் முறையாக மம்முட்டி.

0

இவரா இபப்டி? பொட்டு, புடவை என்று பெண் கெட்டப்பில் முதன் முறையாக மம்முட்டி.

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி அவர்கள் தான். நடிகர் மம்முட்டி அவர்களின் உண்மையான பெயர் முகமது குட்டி. அவர்களின் தன்னுடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவைகள் வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று உள்ளார். மேலும்,இவர் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி அவர்கள் தமிழில் ஆனந்தம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,ஜூனியர் சீனியர்,பேரன்பு என பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மம்முட்டி அவர்கள் தற்போது “மாமாங்கம்” என்ற வரலாற்று கதையில் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் பத்ம குமார் அவர்கள் இயக்கி உள்ளார்.

வேணுமுன்னா பிள்ளை அவர்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளார். மேலும்,மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் சரித்திர படமாக மாமாங்கம் இருக்கும். இதனைத்தொடர்ந்து இந்த படத்தில் மம்முட்டி, உன்னி முகுந்தன்,சித்திக், மணிகுட்டன், மணிகண்டன்,அனு சித்தாரா, இனியா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், மனோஜ் பிள்ளை அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதோடு ஜெயச்சந்திரன் அவர்கள் இசை அமைத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் மம்முட்டியின் மாமாங்கம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகி திரையரங்கிற்கு வெளிவர உள்ளது. மேலும்,மாமாங்கம் படம் 1680 காலகட்ட பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பழரிப் பட்டுவின் திருவையாறில் நடக்கும் கலாச்சார விழாவில் களமாக கொண்ட கதையாக அமைந்து உள்ளது. இவரா இபப்டி.

இந்த பின்னணியில் ராஜா ஜாமோரின் என்னும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய சாவேர்ஸ் என்னும் ஒரு சிறு போராட்ட குழுவை மையமாகக் கொண்டது தான் மாமாங்கம். மேலும், அந்த குழுவிலும் யாராலும் சாதிக்க முடியாததை சாதித்த உண்மையான ஹீரோ, முடியாததை முடித்துக் காட்டும் வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப்பெரும் போர் வீரனின் கதையையும், அவனின் வெற்றி பெறுவதை குறித்து பிரம்மாண்டமாக படைக்கப்பட்ட படமாகும். மேலும், இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் மம்முட்டி அவர்கள் எல்லா மொழிகளிலும் தன்னுடைய குரலிலேயே டப்பிங் செய்துள்ளார்.

சொன்னதை செய்தாரா மூக்குத்தி முருகன். மேலும், தமிழில் கடைசியாக நடித்த படம் பேரன்பு. அந்த படத்தை இயக்கியவர் ராம் தான். மேலும்,மம்முட்டியின் மாமாங்கம் படத்திற்காக தமிழ் மொழிக்கு வசனங்களை இயக்குனர் ராம் எழுதி உள்ளார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் மம்முட்டியின் மாமாங்கம் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 21 என்று அறிவித்தார்கள். மம்முட்டியின் தீவிர ரசிகர் மேமன் சுரேஷ். மேலும், மேமன் சுரேஷ் அவர்களுடைய திருமணம் தேதியும் மாமாங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் ஒன்று என்பதால் மேமன் சுரேஷ் தன்னுடைய திருமணத்தை முப்பதாம் தேதி மாற்றி வைத்தார். இப்படி ஒரு விஷயத்தை யாராலுமே செய்ய முடியாது. மேலும், இப்படி ஒரு தீவிர ரசிகரா!! என்று பல பேரும் இணையங்களில் கருத்துகளை தெரிவித்து வந்தார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாரணம் என்ன தெரியுமா? முதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு.
Next articleசொன்னதை செய்தாரா மூக்குத்தி முருகன்! ஜெயித்த வீட்டை வைத்து இதை தான் செய்வேன்.