இலங்கை வங்கியில் முதன் முறையாக நிகழ்ந்த ஆச்சரியம்!

0

கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை வங்கியின் தன்னியக்க பண பரிமாற்றல் மற்றும் காசு வரவு வைத்தல் கருவிகள் மூலம் மிகப்பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நாடெங்கிலுமுள்ள ஏ.ரி.எம் நிலையங்களிலிருந்து ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் வங்கியின் ஏ.ரி.எம், சி.டி.எம் வலைப்பின்னல்களில் 930 இற்கு மேற்பட்ட கருவிகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ள அதே நேரம், இவற்றின் ஊடாக இந்தளவு பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை வங்கி அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையை உலுக்கியுள்ள பெண்!
Next article10 வயது மகனின் தாயை திருமணத்திற்கு கட்டாயபடுத்திய பிரபலம்!