இலங்கையில் இம் மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கத் திட்டம்?

0

இலங்கையில் இம் மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கத் திட்டம்?

இம் மாத இறுதியில்

நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ‘அனில் ஜயசிங்க’ தெரிவித்துள்ளார்.

இம்மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாத இறுதிக்குள் இலங்கையில் ஊரங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், வைரஸை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் தமக்கிடையில் சமூக விலகலை உறுதி செய்து, ஒரு சாதாரண வாழ்க்கையை பராமரிப்பதில் பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறு அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று கிளிநொச்சியின் “ஸ்கந்தபுரம்” பகுதியில் வாய்க்காலுக்குள் இருந்து ஒரு குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்!
Next articleஜோதிட சிறுவன் சொன்னது எல்லாம் பலித்தது இல்லை.. ‘விக்னேஷ் காந்த்’ பர(பரப்பு) வீடியோ!.