இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய மாற்றம் ஒன்று நிலவவுள்ளதாக தென்னிலங்கையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
நெற்செய்கையினை மேற்கொள்ளும் விவசாய மக்களுக்காகவே இந்த புதிய மாற்றம் நிகழவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் விவசாயிகளுக்காக உரத்தினை மானியமாக வழங்கும் நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுகுக்கு வருகின்றது.
அதன்படி, நெல் செய்கைக்கு 500 ரூபாவுக்கு உரம் மானியமாக வழங்கப்படவுள்ளதுடன், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு வழங்குதல் இன்று நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: