இலங்கையின் சில பகுதிகள் கடல் நீரினால் மூழ்கும் அபாயமா? மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0

இலங்கையின் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பரப்பிற்குள் வரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

தென்னிலங்கையின் சில பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது.

எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென் மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பில் சுமார் மூன்று மீற்றருக்கும் மேலாக கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொந்தளிப்பு தொடர்பில் தேவையற்ற ரீதியில் அச்சம் கொள்ள வேண்டாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சூழவுள்ள வளிமண்டவியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே கடல் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

காலநிலை மாற்றம் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ் கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை என பொது மக்களிடம் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமே மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலைகள் உயர்வடையும்?
Next articleபால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு?