இலங்கையின் ஒரு பகுதியில் ஏற்படவுள்ள ஆபத்து! 3233 குடும்பங்களுக்கு எச்சரிக்கை!

0

பதுளை மாவட்டத்தில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 29000 குடும்பங்களுக்கு இந்த மண் சரிவு அபாயம் உள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

இவர்களில் 3233 குடும்பங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 25767 குடும்பங்கள் மத்திய நிலை ஆபத்தில் உள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இது பதுளை மாவட்டத்தில் வசிக்கும் முழு குடும்பங்களின் எண்ணிக்கையில் 12.26 வீதமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleடிக் டாக் பெண் கொலை விவகாரத்தில் கணவனின் வாக்குமூலம்! அவள் என்னிடம் அப்படி சென்னால்! கொலை செய்தேன்!