பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.
இன்றைய தினம் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அதிர்ஷ்டவசமாக இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.
சிறுமியின் வெற்றியில் பூரித்து போன அவரின் தாய் கண்ணீரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சின்மயி குறித்த பல தகவல்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளது.
சின்மயி ஈழத்திரு நாட்டில் யாழ்.குடாநாட்டில் அமைந்துள்ள சாவகச்சேரி – மட்டுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக சிறுவயதில் கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்து தற்போது ரொறன்ரோவில் வசித்து வருகின்றார்.
ஈழத்து வேரில் முளைத்த எத்தனையோ செடிகள் புலம்பெயர் தேசங்களில் விருட்சங்களாக கிளை பரப்புகின்றன.
அதைப் போன்று சின்மயி இசையில் சிறக்கவும் போட்டியில் வெல்லவும் இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் உறவுகள் மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.