இன்றைய ராசிபலன் 6.7.2018 வெள்ளிக்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 6.7.2018 வெள்ளிக்கிழமை !

6.7.2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 22-ம் நாள்.
தேய்பிறை அஷ்டமி திதி இரவு 9.03 வரை பிறகு நவமி. ரேவதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 4.04 வரை பிறகு அஸ்வினி. யோகம்: அமிர்தயோகம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு, தேவகோட்டை ரங்கநாதர் பவனி.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.

மேஷம் : அலைகழிப்பு
ரிஷபம் : பதவி
மிதுனம் : சாதனை
கடகம் : உதவி
சிம்மம் : அலட்சியம்
கன்னி : வருமானம்
துலாம் : சாதுர்யம்
விருச்சிகம் : சுபசெய்தி
தனுசு : நினைவு
மகரம் : செல்வாக்கு
கும்பம் : அறிவு
மீனம் : நெருக்கடி

மேஷம்: குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள்

ரிஷபம்: எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்: தன்னம் பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து விலகும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கன்னி: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இலையை நீரில் போட்டு வைத்தால் நடக்கும் மாயம் என்ன? இந்த அரிய இலையின் நன்மைகளை தெரிஞ்சுகோங்க!!
Next articleசெவ்வாய் கிழமைகளில் ஏன் அனுமனுக்கு இந்த பொருட்களைப் படைக்க வேண்டுமென தெரியுமா?