இன்றைய ராசிபலன் 30.5.2018 புதன்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 30.5.2018 புதன்கிழமை !

30.5.2018 புதன்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 16-ம் நாள்.
தேய்பிறை பிரதமை திதி இரவு 9.50 வரை பிறகு துவிதியை. கேட்டை நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.39 வரை பிறகு மூலம். யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.39 வரை பிறகு மரணயோகம்.
குளிகை: 10:30 – 12:00
சூலம்: வடக்கு.
பொது: சேலையூர் ஸ்ரீசாந்தானந்தசுவாமிகள் ஆராதனை, காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு உபயநாச்சியார்களுடன் சந்திரப் பிரபையிலும் பவனி.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 6-7.30,9-10,1.30-3,4-5,7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.

மேஷம் : இழப்பு
ரிஷபம் : செயல்
மிதுனம் : திறமை
கடகம் : சந்தோஷம்
சிம்மம் : தன்னம்பிக்கை
கன்னி : ஆசை
துலாம் : மகிழ்ச்சி
விருச்சிகம் : எதிர்ப்பு
தனுசு : அலைக்கழிப்பு
மகரம் : முடிவு
கும்பம் : அறிமுகம்
மீனம் : மனோபலம்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர் கள். அரசால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங் குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சிறப்பான நாள்.

துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செல வுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர்களுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தி னருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

கும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபயனுள்ள மிகவும் எளிமையான 20 வீட்டு பூஜை குறிப்புகள்!
Next articleபடுக்கையில் நீங்கள் இடது பக்கம் சரிந்து படுத்தால் எவ்வளவு நன்மைகள் என தெரியுமா?