இன்றைய ராசிபலன் 3.7.2018 செவ்வாய்கிழமை !!

0

இன்றைய ராசிபலன் 3.7.2018 செவ்வாய்கிழமை !!

3.7.2018 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 19-ம் நாள்.
தேய்பிறை பஞ்சமி திதி இரவு 7.52 வரை பிறகு சஷ்டி. சதய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.09 வரை பிறகு பூரட்டாதி. யோகம்: மரணயோகம்.
குளிகை: 12:00 – 3:30
சூலம்: வடக்கு.
பொது: சுவாமி மலை முருக பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.

மேஷம் : மனோபலம்
ரிஷபம் : சிந்தனை
மிதுனம் : நன்மை
கடகம் : இழப்பு
சிம்மம் : ஆதரவு
கன்னி : நினைவு
துலாம் : சந்திப்பு
விருச்சிகம் : நற்செய்தி
தனுசு : சாதுர்யம்
மகரம் : சிந்தனை
கும்பம் : நிதானம்
மீனம் : கவனம்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.

ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம்வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங் குவார்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத் தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

துலாம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும் பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். இங்கித மாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந் திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத் தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகர்ப்பிணி பெண்கள் தினமும் உடலுறவு வைத்துக் கொள்வதால் நிகழும் ஆச்சரியங்கள்!
Next articleவியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!