இன்றைய ராசிபலன் 21.5.2018 திங்கட்கிழமை!
21.5.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 7-ம் நாள்.
வளர்பிறை சப்தமி திதி மறுநாள் பின்னிரவு 2.27 வரை பிறகு அஷ்டமி. ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.26 வரை அதன் பிறகு மகம். யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.26 வரை அதன் பிறகு மரணயோகம்.
குளிகை: 1:30 – 3:00
சூலம்: மேற்கு.
பொது: சோழவந்தான் ஸ்ரீமாரியம்மன் உற்சவ ஆரம்பம், திருமாகாளம் சோமயாஜி யாகம், ஸ்ரீரங்கம் வசந்த உற்சவ ஆரம்பம், காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோஷ்டம் தேவேந்திர மயில்.
பரிகாரம்: வெல்லம்.
நல்ல நேரம் 6-7, 9-10.30, 1-2, 3-4, 6-9.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30
இராகு காலம் மாலை மணி 4.30-6.00
மேஷம் : நன்மை
ரிஷபம் : சாதுர்யம்
மிதுனம் : தீர்வு
கடகம் : சம்பவம்
சிம்மம் : கவனம்
கன்னி : நட்பு
துலாம் : ஆசி
விருச்சிகம் : நன்மை
தனுசு : சகிப்பு
மகரம் : முடிவு
கும்பம் : உதவி
மீனம் : மனோபலம்
மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகிட்டும் நாள்.
ரிஷபம்: சவால்கள், விவா தங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
கடகம்: இன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங் களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
விருச்சிகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
தனுசு: இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங் கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்து ழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.
கும்பம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.