இன்றைய ராசிபலன் 21.4.2018!

0

இன்றைய ராசிபலன் 21.4.2018

21.4.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 8-ம் நாள்.
வளர்பிறை சஷ்டி திதி இரவு 8.51 வரை பிறகு சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 9.51 வரை பிறகு புனர்பூசம். ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: சிங்கிரிகுடி நரசிம்மர் துவஜாரோஹணம். சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : பாராட்டு
ரிஷபம் : ஆதரவு
மிதுனம் : பிரச்னை
கடகம் : ஆரோக்யமின்மை
சிம்மம் : மதிப்பு
கன்னி : வெற்றி
துலாம் : நன்மை
விருச்சிகம் : சங்கடம்
தனுசு : பொருள்
மகரம் : சிந்தனை
கும்பம் : திட்டம்
மீனம் : நட்பு

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கடகம்: எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.

கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.

தனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்-. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅவசர அவசரமாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர்கள் லண்டனில் செய்த வேலை!
Next articleமுதல் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!