இன்றைய ராசிபலன் 19.5.2018 சனிக்கிழமை!

0

இன்றைய ராசிபலன் 19.5.2018 சனிக்கிழமை!

19.5.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 5-ம் நாள்.
வளர்பிறை சதுர்த்தி திதி காலை 9.33 வரை பிறகு பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் காலை 6.11 வரை பிறகு புனர்பூசம் மறுநாள் பின்னிரவு 4.21 வரை அதன் பிறகு பூசம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: திருநரையூர் நம்பியாண்டார் நம்பி திருமுறை விழா, பகவான் சங்கரநாராயண பரப்பிரம்ம ஜெயந்தி, மாயவரம், நயினார்கோவில், காளையார்கோவில், உத்தமர்கோவில், திருப்புகழூர், திருப்பத்தூர், திருவாடாணை ஆகிய தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவாரம்பம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : காரியம்
ரிஷபம் : பேச்சு
மிதுனம் : சமாளிப்பு
கடகம் : அலைக்கழிப்பு
சிம்மம் : சந்திப்பு
கன்னி : திறமை
துலாம் : முயற்சி
விருச்சிகம் : சிக்கனம்
தனுசு : நன்மை
மகரம் : அனுகூலம்
கும்பம் : செயல்
மீனம் : சமயோஜிதம்

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மை
யுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள்எடுப்பீர்கள். புதியவரின்நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லி கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் அன்பு தொல்லை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் விமர்சனங்கள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று
வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் உடலையும், மனதையும், புத்துணர்ச்சியாக்கும் சில உணவுகள்!
Next articleஇரத்தம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவரா நீங்கள் கவலை வேண்டாம்! 3 நாட்கள் இவற்றை செய்து பாருங்கள்!