இன்றைய ராசிபலன் 19.4.2018!

0

இன்றைய ராசிபலன் 19.4.2018!

19.4.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 6-ம் நாள்.
வளர்பிறை சதுர்த்தி திதி மறுநாள் பின்னிரவு 1.30 வரை பிறகு பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் மறுநாள் நள்ளிரவு 12.59 வரை பிறகு மிருகசீரிஷம். யோகம்: மரணயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: சூரியனார் கோயில் ஸ்ரீசிவாக்கிரயோகிகள் குருபூஜை, ஸ்ரீரங்கம் கோடைத்திருநாள், வார்த்தா கௌரி விரதம், தூத்துக்குடி ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் உற்சவாரம்பம், மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் பூத அன்ன வாகனத்தில் திருவீதிவுலா.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : தீர்வு
ரிஷபம் : எதிர்ப்பு
மிதுனம் : சிக்கனம்
கடகம் : சமயோஜிதம்
சிம்மம் : நன்மை
கன்னி : உற்சாகம்
துலாம் : தாமதம்
விருச்சிகம் : பணவரவு
தனுசு : வெற்றி
மகரம் : வசதி
கும்பம் : நன்மை
மீனம் : மேன்மை

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி சென்ற உறவினர்கள் வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கிதருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

விருச்சிகம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்றுமதத் தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு!
Next articleமீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்…இளைஞர்களை சுண்டி இழுக்கும் புதிய வீடியோ!