இன்றைய ராசிபலன் 15.5.2018 செவ்வாய்கிழமை!

0

இன்றைய ராசிபலன் 15.5.2018 செவ்வாய்கிழமை!

15.5.2018 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் முதலாம் நாள்.
தேய்பிறை அமாவாசை திதி மாலை 6.06 வரை பிறகு பிரதமை. பரணி நட்சத்திரம் காலை 11.27 வரை பிறகு கிருத்திகை. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 12.00 – 1.30
சூலம்: வடக்கு.
பொது: சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிரகாரம், குடியாத்தம் கங்கையம்மன் சிரசு உற்சவம், திருப்பதி கங்காஜாத்ரா முடிவு, காரைக்குடி கொப்புடையம்மன் ரத உற்சவம்.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.

மேஷம் : உழைப்பு
ரிஷபம் : இழப்பு
மிதுனம் : ஆன்மிகம்
கடகம் : செல்வாக்கு
சிம்மம் : நம்பிக்கை
கன்னி : வாக்குவாதம்
துலாம் : வெல்வீர்
விருச்சிகம் : தனலாபம்
தனுசு : நட்பு
மகரம் : பாசம்
கும்பம் : உதவி
மீனம் : இன்பம்

மேஷம்: மாலை 5.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி: மாலை 5.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 5.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடும் சரியான முறை என்ன?
Next articleநீண்ட ஆயுள் வாழ ஆசையா? அப்படியெனில் முழு தானியங்கள் சாப்பிடுங்கள்!