இன்றைய ராசிபலன் 10.7.2018 செவ்வாய்கிழமை!!

0

இன்றைய ராசிபலன் 10.7.2018 செவ்வாய்கிழமை!!

10.7.2018 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 26-ம் நாள்.
தேய்பிறை துவாதசி திதி மாலை 4.06 வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.37 வரை பிறகு மிருகசீரிஷம். யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.37 வரை பிறகு சித்தயோகம்.
குளிகை: 12:00 – 3:30
சூலம்: வடக்கு.
பொது: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு கண்டருளல், திருவண்ணாமலை சிவபெருமான் பவனி, குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.

மேஷம் : புத்துணர்ச்சி
ரிஷபம் : தயக்கம்
மிதுனம் : செலவு
கடகம் : தன்னம்பிக்கை
சிம்மம் : நட்பு
கன்னி : சந்தோஷம்
துலாம் : கவலை
விருச்சிகம் : நன்மை
தனுசு : அறிமுகம்
மகரம் : விவேகம்
கும்பம் : வருமானம்
மீனம் : திட்டம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். முன்கோபம் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிற ந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் !
Next articleஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்!