இன்றைய ராசிபலன் 10.5.2018 வியாழக்கிழமை!

0

இன்றைய ராசிபலன் 10.5.2018 வியாழக்கிழமை!

10.5.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 27-ம் நாள்.
தேய்பிறை தசமி திதி இரவு 9.06 வரை பிறகு ஏகாதசி. சதய நட்சத்திரம் காலை 10.01 வரை பிறகு பூரட்டாதி. யோகம்: மரணயோகம் காலை 10.01 வரை பிறகு சித்தயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் வசந்த மண்டபத்தில் பவனி.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : நன்மை
ரிஷபம் : இன்பம்
மிதுனம் : உதவி
கடகம் : தடுமாற்றம்
சிம்மம் : பேச்சு
கன்னி : செயல்
துலாம் : ஆசி
விருச்சிகம் : நன்மை
தனுசு : நட்பு
மகரம் : மதிப்பு
கும்பம் : வாக்குவாதம்
மீனம் : அசதி

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூ ரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: பழைய பிரச்னை களை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ் ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்-. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத் யோக த்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்: மறைமுக விமர் சனங்களும், எதிர்மறை எண்ணங்களும் வந்து செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இடத்தில் பீரோவை வைத்தால் பண மழை கொட்டுமாம்.
Next articleஅறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல்லை கரைத்திட உதவும் எளிய வழி!