வயது கூடிய பெண்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது என்று நம் முன்னோர்களின் அறிவியல் கூறுகிறது !

0

நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப் போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள் தனம் என்றும் மூட நம்பிக்கை என்றும் கூறி வருகிறது.

மேற்கத்தியத்தை கண் மூடித்தன மாகப் பின்பற்றி வரும் நாம் எதை பற்றியும் யோசிப்பதே இல்லை. முக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் குடும்ப உறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பிரபலங்கள் உட்பட வயது மூத்த பெண்களை திருமணம் செய்த பலரது வாழ்க்கை முறிவில் தான் முற்றுபுள்ளிப் பெற்றிருக்கின்றன. இனி, இவ்வாறு ஆண்கள் தங்களை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் ஏற்படும். அறிவியல் ரீதியான உண்மைகள் மற்றும் பாதிப்புகள் பற்றிக் காண்போம்…

சமநிலை வயதுடைய ஆண்களை விட பெண்கள் மன நிலையில் முதிர்சியானவர்கள்.
அதனால், தன்னை விட வயதுக் குறைந்த பெண்ணை திருமணம் செய்வது தான் சரியான முறை.

இல்லையேல் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும், இது பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாறும்.

பெண்களுக்கு பொதுவாகவே 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும்.

பெரும்பாலும் 40 வயதிலிருந்தே பெண்கள் குடும்ப உறவில் நாட்டம் காட்ட மாட்டார்கள்.
ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட குடும்ப உறவில் நாட்டம் இருக்கும்.

இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக் கின்றனர்.

குறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது.

இந்த வயது இடைவேளை இல்லாத போது, அவரவர் உணர்வுகளை சரியாக புரிந்துக் கொள்ள இயலாது போகும். ஒருவருக்கு மற்றவரது உணர்வுகள் கேலியாகவும், விளையாட்டாகவும், அதிகமாக தேவையின்றி வெளிப்படுத்துவதாகவும் தோன்றும்.

இவை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் உறவினுள் பிரிவை ஏற்படுத்தும்.
ஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும்.
ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கி விடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். பெண்ணிற்கு விரைவாகவே நாட்டம் குறைந்து விடும். நீங்கள் குடும்ப உறவிற்கு அணுகும் போது மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் எது செய்தாலும் கணவனைப் போல பாவிக்காது, குழந்தையைப் போல பார்ப்பார்கள்.

ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போக போக மனக் கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅழகிய கூந்தலால் உலகின் கவனத்தை ஈர்த்த 5 வயதுச் சிறுமி
Next articleமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: