இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள் பாவம் இவர்கள்!

0

இந்த உலகத்தில் நாம் பிறக்கும் போதே அம்மாவும், அப்பாவும் நமக்கு துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பூமிக்கு அனுப்பு வைக்கப்படுகிறோம். அம்மா, அப்பா, நண்பர்கள், கணவன் ,மனைவி என வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு கட்டத்திற்கும் நமக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. ஆனால் சிலரோ துணைக்கு யாரும் தேவையில்லை என்று தனியாகவே வாழ்க்கையை கடக்க எண்ணுவார்கள்.

சொல்லப்போனால் இப்படி நினைப்பவர்கள் கூட்டமாக இருப்பதை விட தனிமையில் இருக்கும் போது அதிக பலசாலியாக உணர்வார்கள். ஆனால் சிலரோ தனிமையை நினைத்து மிகவும் பயமும், கவலையும் கொள்வார்கள்.ஏனெனில் நாமாக எடுத்துக்கொள்ளும் போது சொர்க்கமாக தெரியும் தனிமை மற்றவர்கள் வழங்கும் போது நரகமாக தெரியும். சிலர் பிறந்தது முதலே தனிமையை நினைத்து பயம் கொள்வார்கள், இது அவர்களின் பிறவி குணமாகவே இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் தனிமையை நினைத்து பயப்படும் ராசிகள் யார் யாரென பார்க்கலாம்.

மேஷம் மேஷ ராசிக்கார்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்புபவராக இருக்கலாம், ஆனால் இவர்களால் நீண்ட நாட்களுக்கு தனிமையில் இருக்க முடியாது, ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் இருந்து பாராட்டையும், அங்கீகாரத்தையும் விரும்புபவர்கள். அவர்களுக்கு தேவையான பாராட்டுக்கள் கிடைக்கும் போது அவர்களிடம் இருந்து நிபந்தனையற்ற அன்பை எதிர்பார்க்கலாம். தனிமை இவர்களை பலவீனப்படுத்தும் மற்ற நேரங்களை விட தனிமையாக இருக்கும் நேரத்தில் இவர்கள் மிகவும் மெதுவாக வேலை செய்வார்கள்

மிதுனம் இவர்களை இரட்டை ராசி என்று கூறலாம் ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் தன்னுடன் துணைக்கு ஒருவராவது இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இவர்கள் அதிகம் பேசுபவராக இருப்பார்கள், தங்களின் சிந்தனைகளை எப்பொழுதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள் அதேசமயம் அவர்கள் மற்றவர்களிடம் கற்றுக்கொள்ளவும் விரும்புவார்கள். எனவே இவர்கள் தனிமையில் இருக்கும் போது சோர்வாக இருப்பதுடன் மகிழ்ச்சியின்றியும் இருப்பார்கள். பிடித்தவர்களுடன் இருக்கும் போது இவர்களின் செயல்பாடுகள் இருமடங்கு வேகமாக இருக்கும்.

கடகம் ராசிகளிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் என்றால் அது கடக ராசிக்காரர்கள்தான். எனவே அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். மற்றவர்களை கவனித்து கொள்வது, கவனிக்கப்படுவது இரண்டுமெ இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும். மற்றவர்களை தாங்கள் கவனித்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவர்கள் வலிமையானவர்களாக இருக்க கூடாதென நினைப்பார்கள். தாங்கள் ஈடுபடும் அனைத்து செயல்கலையும் உணர்ச்சிரீதியாகவே அணுகுவார்கள். துணையின்றி தனிமையில் இருப்பது என்பது இவர்களால் முடியதா ஒன்றாகும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் தனக்கு தேவைப்படும் போதெல்லாம் தன்னை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இது அவர்களுக்கு தங்களின் சுயமதிப்பை உணர்த்த செய்கிறது. மற்றவர்களுடன் இருக்கும் போது இவர்கள் தன்னை பற்றி நன்கு ஆராய்ந்து தன்னால் மற்றவர்களுக்கு என்ன கொடுக்க இயலும், தன்னால் என்ன செய்ய இயலும் என்பதை இவர்கள் அதிகம் உணர்ந்து கொள்வார்கள். தனிமையில் இல்லாதபோது இவர்கள் அதிக பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் ராசியின் அடையாளத்தை போலவே மிருகத்தனமான குணம் கொண்டவர்கள். இவர்கள் பாலுறவில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள், இந்த தொடர்பு மிகவும் அவசியமானதுதான். துணை இல்லாதபோது தங்களை கவனித்து கொள்வதே இவர்களுக்கு கஷ்டம்தான். தனக்குள் இருக்கும் சக்தியையும் தன்னை தானே கவனித்து கொள்ளலாம் என்பதையும் இவர்கள் உணர்ந்தால் அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பதை தவிர்ப்பார்கள். தனியாக இருப்பதை நினைத்து பயப்படவும் மாட்டார்கள்.

துலாம் சமநிலையில் இருக்க எப்போதும் விரும்புபவர்கள் துலாம் ராசிக்காரர்கள். துணையுடன் இருக்கும் போது இவர்களின் கவனம் மற்றும் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். அதுவே அவர்கள் கூட இல்லாதபோது இவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாவார்கள். துலாம் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் பயத்தை எதிர்கொள்ள நேர்ந்து விட்டால் இவர்களால் உறவை பாதுகாத்து கொள்ளமுடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களால் அது முடியாது. மற்றவர்களை சார்ந்திருப்பதாலே இவர்களின் வாழ்கையில் பலவற்றை இழப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்ற அற்புத நாட்டு வைத்தியங்கள்!
Next articleசிக்ஸ் பேக் வைக்க ஆசையா? இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்!