நாம் குண்டாவதற்கு முக்கியமான காரணம் சாப்பாடு மட்டுமல்ல சில மோசமான பழக்கபழக்கங்களும் தான் இதற்கு காரணமாக அமைகிறது.
கொஞ்சமாக சாப்பிட்டாலும் நாம் பின்பற்றுகின்ற செயற்பாடுகள் எம்மை வெகுவாக பாதிக்கின்றது. அந்த செயற்பாடுகள் என்ன? என்பதைப்பற்றி பார்க்கலாம்.
வெளிச் சாப்பாடு : ஹோட்டல், ரெஸ்டரன்ட் ஆகிய இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். ஏன் என்றால் அவா்கள் பாவிக்கும் எண்ணெய்கள் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். ஆகவே ஆரோக்கியமான உணவுகளைவீட்டில் செய்து சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்தை பேணலாம்.
வேகமாக சாப்பிடுவது :வேலை நிமித்தம் நாம் அவசர அவசரமக உணவை சாப்பிடுவதால் அஜீரண கோளாறுகள் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். மேலும் சரியாக ஜீரணிக்காமல் கொழுப்புகள் உடலில் தங்கிவிடும்.இதனால் உடல் எடை அதிகாிக்கும்.
சாியான நேரத்திற்கு உணவு உண்ணாமை : நாம் பசிக்கும் நேரத்தில் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு விட்டால் சாியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும் இதனால் உடல் பருமனை அதிகப்படுத்த நாமே காரணமாகின்றோம்.
மன அழுத்தத்துடன் சாப்பிடுதல் : நாம் கோபம், மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிக மிக தவறான செயல் அந்த நேரத்தில் எண்ணங்களை உடனடியாக மாற்றி இயல்பு நிலைக்கு வந்த பின்னா் சாப்பிடலாம் இதுவும் உடல் பருமனை கொண்டு வரும்
பொாித்த உணவுகள் : பொாித்த உணவுகளை அளவுக்கு மீறி உண்பதாலும் , குளிா்சானப் பெட்டியில் உள்ள உணவுகளை திரும்ப திரும்ப சூடாக்கி உண்பதாலும் உடல் பருமன் அதிகாிக்கிறது மேலும் ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆகியவற்றால் உடல் குண்டாகிறது.
அனைவருக்கும் பகிருங்கள்!
By: TamilPiththan