இந்த சாற்றை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்

0

இந்த டிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு – இந்த சாறை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்

வெண்பூசணிக்காய் – அரை கிலோ
தேன் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை

வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.

அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

பயன்கள்

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும்.

உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம்.

புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருகினால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடயாலிசிஸ் செய்பவர்கள் இந்த விடையத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.!
Next articleஉங்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டதா? கொலஸ்ட்ரோல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை!