ஆவேசமான தந்தை! அபிராமிக்காக ஜாமீன் கேட்கவே மாட்டோம்!

0

சொந்த பிள்ளைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமிக்காக ஜாமீன் கேட்கப்போவதில்லை என அவரது தந்தை சவுத்தரராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவர், அபிராமி சிறையில் இருப்பது அவள் செய்த தவறுக்கான தண்டனை. அவளுக்காக ஜாமீன் கேட்டு செல்ல தாம் தயாராக இல்லை என ஆவேசமுடன் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் விஜயை காதலிப்பதாக சொன்னபோது, அவளுக்கும் விஜய்க்கும் திருமணம் செய்து வைத்தோம்.

விஜயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில் , அவர்கள் தனித்து வாழ்ந்து வந்தனர். அபிராமியை நல்ல முறையில் வாழவைக்க விஜய் கஷ்டப்பட்டு உழைத்தார்.

இரண்டு குழந்தைகள் அழகான குடும்பம் என்று அவர்களின் வாழ்க்கையும் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

சுந்தரம் விடயத்தில் அவளது போக்கு தவறு என பல முறை அவளுக்கு அறிவுரை கூறி இருக்கிறேன். அவள் அதை கேட்டதே இல்லை.

இந்த கொடூரம் நிகழ்வதுக்கு முன் கூட சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று இரண்டு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டாள்.

அப்போதே பொலிசிடம் போயிருந்தால் கூட என் பேரப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருந்திருக்குமே! இப்போது கூட அவர்கள் என்னை தாத்தா என அழைப்பது தான் கேட்டு கொண்டிருக்கிறது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணமான மூன்று நாளில் மணமகன் தற்கொலை காரணம் தெரிந்தால் திட்டியே தீர்த்திடுவீங்க!
Next articleமனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த செயல்! பின் மனைவி எடுத்த முடிவு!