யாழ்.கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினை இலக்கு வைத்து துண்டுபிரசாரங்கள் வெளியிடப்பட்டமையின் பின்னணியில் ஆவா குழுவினால் பாதிக்கப்பட்ட மற்றொரு வாள்வெட்டு குழு உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,அண்மையில் கலட்டி பகுதியில் வைத்து வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது ஆவா குழு தாக்குதல்நடாத்தியிருந்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞனும், மேலும் சில இளைஞர்களும் இணைந்து ஆவா குழுவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களே ஆவா குழுவுக்கு எதிராக துண்டு பிரசிரங்களை வெளியிடுவதுடன் ஆவா குழு உறுப்பினர்களை இலக்கு வைத்து தாக்குதலும் நடாத்தி வருகின்றனர் என பொலிஸார் கூ றியுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: