ஆறு ஆண்டுகள் கழித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட மகள்‍_ எப்படி வந்தார் தெரியுமா? அதிசயமான தகவல்!

0

தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கருதிய மகளை ஆறு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் சந்தித்த சம்பவம் தாயரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் குடியிருப்பவர் Luz Cuevas. இவரது குடியிருப்பானது கடந்த 1997 ஆம் ஆண்டு தீ விபத்தில் சிக்கி சேதமடைந்தது. இச்சம்பவத்தின்போது பிறந்து வெறும் 10 நாட்களேயான அவரது மகள் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் படுத்திருந்துள்ளார்.

அப்போது தீ விபத்தில் இருந்து மகளை காப்பாற்றும் நோக்கில் மாடிக்குச் சென்ற போது ஏமாற்றமே மிஞ்சியது. அங்கே தொட்டில் மட்டுமே இருந்தது குழந்தை இல்லை.

குழந்தை தீயில் இறந்திருக்கலாம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் பிஞ்சு குழந்தையின் தீ விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், லஸ் தமக்கு நெருங்கிய நபர் ஒருவரின் பிறந்த நாள் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

தாய் அதிர்ச்சி பரிசு
அங்கு கன்னக் குழியுடன், கறுப்பு கேசத்துடனும் சிறுமி ஒருவரை லஸ் அந்த விருந்தில் சந்தித்துள்ளார். அச்சிறுமியின் அருகாமையில் சென்ற அவர் தந்திரத்தால் குறித்த சிறுமியின் தலைமுடி இழைகளை எடுத்து டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
டி.என்.ஏ சோதனையில் உண்மை வெளியானது. அந்த சிறுமி ஆறு ஆண்டுகளுக்கு முன் தீ விபத்தில் கொல்லப்பட்டதாக கருதிய அதே குழந்தைதான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதோடு குழந்தைக்காக உறவினர் ஒருவரே திட்டமிட்டு லஸ்சின் குடியிருப்புக்கு தீ வைத்ததும் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்தது.
சிறைத்தண்டனை
தீ விபத்து நடந்த அன்று குழந்தையை கைப்பற்றிய Correa என்பவர், New Jersey பகுதிக்கு குடிபெயர்ந்து தமது சொந்த குழந்தை என வளர்த்துள்ளார்.

இதன் மூலம் தற்போது குழந்தையை திட்டமிட்டு கடத்தியது, குடியிருப்புக்கு தீ வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் சுமார் 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமும்தாஜை விடாமல் துரத்தும் மகத்! ஐஸ்வர்யாவை அழ வைத்தது ஏன்?
Next articleநடிகர் சதீஷ் இலங்கைக்கு சென்று செய்த மரியாதைக்குரிய விஷயத்தை பாருங்க!