கொழும்பின் புறநகர் பகுதியில் ஆபாச தொழில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியில் ஈடுபட்ட பல பெண்கள், முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி நீண்ட காலமாக நடத்தி செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஹோட்டலின் உரிமையாளர் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் மூன்று இனங்களையும் சேர்ந்த திருமணமான பெண்களே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, அம்பாறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.