பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #Metoo என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு, அதனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துவருகிறார்கள்.
2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ தனது டுவிட்டரில் பயன்படுத்திய #Metoo ஹேஷ்டேக் தற்போது உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பேரலையாக மாறியுள்ளது.
சமீபத்தில், சின்மயி துவக்கி வைத்த இந்த மீடூ விவகாரத்தில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்பு, பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தைரியமாக சமூக வலைதலங்களிலும், நேர்காணல்களிலும் பேசத்தொடங்கினர்.
இதனால், #MeToo என்ற ஹேஸ்டேக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில், பாலிவுட் டினா தத்தா தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மன வேதனையுடன் பேசியுள்ளார்.
அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா தன்னிடம் அத்துமீறியதாகவும், இதனால் மனவேதனையடைந்து செட்டில் இருந்து ஓடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து, நடிகர் மோகித் கூறியதாவது, டீனா சொல்வது போல எதுவும் நடக்கவில்லை எனவும் தானும் டீனாவும் நல்ல நண்பர்கள் எனவும் கூறியிருக்கிறார். இதில் யார் கூறுவது உண்மை என்றே தெரியவில்லை.