கோவிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் ஏன் தெரியுமா?

0

கோவிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று சான்றோர்கள் கூறுகிறார்களே ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

அதாவது நாம் கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவிக்கொள்ள வேண்டும். பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்கி கொள்ள வேண்டும். பின்னர் துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே சென்று, அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும்.

அந்த படியினை தாண்டும் போது, ” நாங்கள் கொண்டு வந்த எதிர்மறையான எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்லவேண்டும்.

ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எமக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும். அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்.

கோவில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுவதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும்.நாம் கோவிலுக்குள் செல்லும் போது மனதிற்குள் ஒரு அமைதி பிறக்கின்றதை எங்களால் உணர முடிகின்றது

எனவேதான் கோவிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்! கிடைக்கும் அதிஸ்ட பலன் என்ன‌!
Next articleருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? இந்த தவறை செய்யவே கூடாதாம்? ருத்ராட்சம் பெண்கள் அணியலாமா?