கணவன், மனைவியாக இருந்தாலும் சரி, காதலன், காதலியாக இருந்தாலும் சரி உறவில் சில விஷயங்களை அதீத காதலின் வெளிபாடாகவோ, ஆண் என்ற அகம்பாவத்தினாலோ செய்வது மிகவும் தவறு.ஒவ்வொருவருடைய சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருக்க வாய்ப்பில்லை.
தோழிகள் வீட்டிற்கு சென்று வரும் போது நேர தாமதம் ஆவது, ஆண் தோழர்களுடனான நட்பை குறைத்துக் கொள்ள அல்லது முறித்துக் கொள்ள கூறுவது, ஆசை என்றால் அணைப்பதும், கோபம் என்றால் கத்துவது என்ற சுபாவம் போன்றவை ஆண்கள் செய்யும் தவறுகள் என பெண்கள் கூறுகின்றனர்
ஆதிக்கம்
காதலிக்கும் முன்பு கெஞ்சும் ஆண்கள், காதலிக்க துவங்கிய பிறகு. தங்களது நாள் குறிப்புகளில் இருந்து, அந்தநாளின் நிகழ்ச்சி நிரல் வரை அனைத்தையும் ஒப்பிக்க எதிர்பார்ப்பது, ஒவ்வொரு நடவடிக்கையையும் வேவு பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குவது உறவை கசக்க செய்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.
சுதந்திரம்
எங்கள் சுதந்திரத்தை நாங்கள் ஏன் ஆண்களிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும். ஆண்கள் அதை பறிக்கவோ, தடை போடவோ உரிமை இல்லை. காதலன், காதலி / கணவன், மனைவி உறவில் இணைந்த பின்னா் ஏன் பாதுகாப்பு என்ற பெயரில் சுதந்திரத்தை பறிக்க பார்க்கிறீர்கள். தவறு செய்யும் போது தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது, அதை தவறென கூறவில்லை என பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பயணம்
வெளி ஊர்களுக்கு என்றால் பரவாயில்லை. பிறந்து வளர்ந்த ஊரில்
சொந்தங்களை சென்று பார்த்து வருவதற்கு கூட பாதுகாப்பு காரணம் காட்டி சில ஆண்கள் தடை போடுவது தவறு, அதீத காதலாக இருப்பினும், உறவில் விரிசல் ஏற்பட காரணியாக இருக்கிறதாம்.
நட்பு
ஆண்களுக்கு பெண் தோழிகள் இருப்பதை இயல்பாக எடுத்துக் கொள்வதை போல் பெண்களுக்கு ஆண் தோழர்கள் இருப்பதை இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. இதில் பெரியளவில், மனதளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுயநலம்
இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இந்த தருவாயில் ஆண்களுக்கு வேலை மாற்றம் என்றால் உடனே இடம்பெயர்ந்து போக முனையும் அவர்கள் இதுவே, பெண்களுக்கு என்றால் வேண்டாம், வேறு வாய்ப்புகள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக்கழித்து விடுகிறனா், இது செய்வது தவறு என்கின்றனர்.
By: Tamilpiththan