அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
NSW மாநிலத்தில் புதிதாக 5 மொழிகளை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்கலாம் என NSW மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த 5 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக தமிழ் மொழிக்கான பாடத்திட்டத்தை NSW மாநில கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த பாடத்திட்டத்தை அரசு அங்கீகரிக்கும் முன் இந்த பாடத்திட்டம் குறித்து தமிழ் சமூகம் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனவும் அரசு கூறியுள்ளது குறிப்பிடதக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: