திரையுலகத்தை பொறுத்தவரையில், நடிகைகள் எப்படி இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து அவர்களை கிண்டலடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
அப்படி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை சரண்யா மோகன். கேரளாவில் பிறந்த இவர் ஒரு நடன கலைஞர்.
இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் இருக்கின்றார்.
தற்போது அவரின் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அது மாத்திரம் இன்றி, பல விமர்சணங்களை கடந்து சரண்யா புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.