நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பிரபலங்கள் குறித்து சில மோசமான விஷயங்கள் கூறி வருகிறார். தெலுங்கு சினிமாவை தாண்டி இப்போது தமிழ்த் திரையுலகம் பக்கம் வந்துள்ளார்.
கடைசியாக ராகவா லாரன்ஸ் குறித்து பேசியிருந்த அவர் இப்போது அரண்மனை படப்பிடிப்பு தனக்கு நடந்த விஷயம் குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில், அரண்மனை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது கணேஷ் என்பவர் என்னை படப்பிடிப்பிற்கு அழைத்தார் நானும் அங்கு சென்றேன். சுந்தர் சி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள், பின் என் நண்பர் ஒளிப்பதிவாளர் செந்தில் அவர்களையும் சந்தித்தேன். 200 சதவீதம் அவரின் அடுத்த படத்தில் முக்கிய படத்தில் நடிப்பாய் என்றார். அடுத்த நாள் சுந்தர். சி மற்றும் செந்தில் அழைத்தார்கள்.
படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்… கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.