அம்பலமானது CCTV காணொளி! கொழும்பில் பேருந்துகளில் நடக்கும் அசம்பாவிதங்கள்!

0

கொழும்பில் பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெறும் திருட்டு சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

சிலர் குழுக்களாக இணைந்து பேருந்துகளில் பயணிப்போரின் பணம் மற்றும் உடமைகளை திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறநகர் பகுதி நோக்கி பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளது.

கோட்டைக்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

பேருந்துக்குள் நுழைந்த சந்தேக நபர் மிகவும், நுட்பமான முறையில் பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதுபோன்று பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் கொழும்பில் இடம்பெறுவதாகவும், பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளிநாட்டு பெண்ணுக்கு தமிழர் தலைநகரில் நேர்ந்த விபரீதம்!
Next articleயாழில் வைத்து வெளிப்படுத்தப்பட்ட விடயம்! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு?