அமிலத்தில் மூழ்கடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்!!

0
389

மெக்சிகோவில் 3 மாணவர்களைக் கடத்தி, கொலை செய்து, உடல்களை அமிலத் தொட்டியில் மூழ்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவர்களது உடல்கள் டெனாலா நகரில் உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடத்திச் சென்றவர்கள் அவர்களை கொலை செய்து, உடல்களை அங்குள்ள அமிலத் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். உடல்களை அடையாளம் காண முடியாததால் உடல் கூற்றுப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் கொடூர குற்றங்களைப் புரியும் கும்பல்கள் உள்ளன. அவர்கள் இவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Previous articleகொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலில் விழுந்து நன்றி தெரிவித்து தந்தை!
Next articleகருணைக் கொலை செய்யப்பட்ட இனுக்கா!!