குழந்தைகளைக் கொலை செய்ய தூக்க மாத்திரைகள் எப்படி கிடைத்தது என அபிராமி பொலிசாரிடம் கூறியது தெரியவந்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு, சுந்தரம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து வாழ தனது குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி பொலிஸ் விசாரணையில் பல விடயங்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைகளை கொல்ல தூக்க மாத்திரைகள் எப்படி கிடைத்தது என அபிராமி பொலிசாரிடம் கூறியுள்ளார்.
பொலிசார் கூறுகையில், தான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை. மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படுத்தும் மாத்திரைகள் என அபிராமி கூறினார்.
தன்னிடம் 5 மாத்திரைகள் இருந்தன. அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து தான் பாலில் அதைக் கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால், அவசரத்தில் மாத்திரைகள் சரியாகக் கரையவில்லை. கடைசியாகக் குழந்தை கார்னிகா பால் குடித்ததால் இறந்துவிட்டார் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.