யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சிங்கள நபர் ஒருவரால் தனி மனித போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 9.00 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில், வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து, உலக சமாதானம் உருவாக வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கள நபர் தெரிவித்துள்ளார்.
சகோதர இனத்தைச் சேர்ந்த குறித்த நபர் தனி மனிதனாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை அங்குள்ள அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.