எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஜே. சூர்யாவை வைத்து தமிழ்வாணன் இயக்கும் படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் கோலிவுட் வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படம் மூலம் தான் ஜோதிகா கோலிவுட் வந்தார். மேலும் அதே எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படம் ஜோதிகாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
இந்நிலையில் அவர் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்க மறுத்துள்ளார் என்றால் நிச்சயம் ஏதாவது வெயிட்டான காரணம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சினிமாவில் வாழ்வு கொடுத்தவர் படத்திலேயே நடிக்க மறுத்ததால் ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியான தகவலாகவே உள்ளது.