தெல்தெனியாவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாய்மை அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி ஒருவர் திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் குழந்தை பெறும் நிலையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய் இல்லாத நிலையில் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த போது காதல் தொடர்பு ஒன்றின் காரணமாக சிறுமி இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டில் அவரின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.