அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்? ஈழத்தில் நடந்த விசித்திர பூப்புனித நீராட்டு விழா!

0

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா இன்று சமூகவாசிகளை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர்.

அத்துடன் நின்று விடாமல், நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மண்ணில் விளையும் ஆரோக்கியம் நிறைந்த இயற்கைப் பானமான செவ்விளநீர் வழங்கப்பட்டது.

இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இன்றைய நவீன உலகில் நம்மவர்களில் சிலர் நமது கலாச்சாரங்களையும், மரபுகளையும், பின்பற்றி வருவது ஆறுதலளிக்கும் விடயம் என்று சமூகவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடி மணப்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!
Next articleஎச்ச-ரி-க்கை மீன்களை கொண்டு மசாஜ் செய்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் காத்திருந்த பேர-திர்-ச்சி!