அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… என் மனைவியை விட்டு விலகி விடு என உறவினரிடம் கெஞ்சிய கணவன்!

0

இந்தியாவில் மனைவி தனது உறவினருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர், உறவினரை கொலை செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர் சொக்கப்பு கண்ணையா. கண்ணையாவின் மனைவிக்கு அவரின் உறவினர் புத்தையா என்பவருடன் தொடர்பு இருந்த நிலையில் அதை கண்ணையா கண்டுப்பிடித்தார்.

இதையடுத்து புத்தையாவை கொலை செய்ய கண்ணையா முடிவு செய்தார்.

அதன்படி வேலை முடிந்து வீட்டுக்கு தனியாக வந்து கொண்டிருந்த புத்தையாவை வழிமறித்தார். பின்னர், தன் மனைவியுடனான தொடர்பை விட்டு விடும்படி கெஞ்சி அழுதார்.

ஆனால் இதை புத்தையா ஏற்காத நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

அப்போது தன்னிடம் இருந்த இரும்பு கம்பியால் புத்தையாவை அடித்து கண்ணையா கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் புத்தையாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து பயந்து போன கண்ணையா தானாக சென்று பொலிசில் சரண்டைந்தார்.

அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க! வைத்தியம் எட்டு!
Next articleமூக்கடைப்பிலிருந்து எளிதில் மாத்திரையின்றி நிவாரணம் பெற கைவைத்தியங்கள்!!