அக்டோபர் 24 முதல் 30 வரை 2021 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரத்திற்கான‌ ராசிப்பலன்!

0

அக்டோபர் 24 முதல் 30 வரை 2021 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரத்திற்கான‌ ராசிப்பலன்!

இந்த வார கிரக மாற்றம்: ஐப்பசி மாதம் 13 (30-10-2021) தனுசு சுக்கிரன் (மாலை 04.11) இந்த வாரம் சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் எவை!

ரிஷபம் ராசி 23-10-2021 அதிகாலை 01.38 மணி முதல் 25-10-2021 பகல் 02.36 மணி வரை.
மிதுனம் ராசி 25-10-2021 பகல் 02.36 மணி முதல் 28-10-2021 அதிகாலை 03.05 மணி வரை.
கடகம் ராசி 28-10-2021 அதிகாலை 03.05 மணி முதல் 30-10-2021 பகல் 12.50 மணி வரை.
சிம்மம் ராசி 30-10-2021 பகல் 12.50 மணி முதல் 01-11-2021 மாலை 06.39 மணி வரை.

இந்த வார சுப முகூர்த்த நாட்கள் எவை

நாள் 24.10.2021 ஐப்பசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

நாள் 27.10.2021 ஐப்பசி 10 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

நாள் 28.10.2021 ஐப்பசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 11.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

மேஷம் ராசிக்காரர்களுக்கு: அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். வெள்ளியன்று மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதாலும், அஷ்டலட்சுமி ஸ்லோகம் சொல்வதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு: கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மனநிம்மதி ஏற்படும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும் நிலை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்குவீர்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதால் வாழ்வில் சங்கடங்கள் யாவும் இல்லாமல் போகும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 28, 29, 30.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு: மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு, சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசும் போது பேச்சில் சற்று பொறுமையுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப்பலன் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 30.

கடகம் ராசிக்காரர்களுக்கு: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரமும் உயரும். குடும்பத்தினருடன் அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். சூரியன், செவ்வாய் இவ்வாரம் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சஷ்டியன்று விரதமிருந்து கந்த கடவுளாம் முருக பெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 28, 29, 30.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு: மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால நெருக்கடிகள் யாவும் குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சனி பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றலை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் இறையருள் பரிபூரணமாய் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27.

கன்னி ராசிக்காரர்களுக்கு: உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தெம்புடன் செயல்படுவீர்கள். தனகாரகன் குரு 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த தடைகள் விலகி பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால கடன்கள் எல்லாம் பைசலாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.

துலாம் ராசிக்காரர்களுக்கு: சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக இருந்தால் தான் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். முடிந்தவரை பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. நம்பியவர்களே ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30.

சந்திராஷ்டமம் – 23-10-2021 அதிகாலை 01.38 மணி முதல் 25-10-2021 பகல் 02.36 மணி வரை.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு: விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை ஏற்படும். முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் மதிநுட்பத்துடன் செயல்பட்டு உயர்வான நிலையினை அடைவீர்கள். போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளிமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 24, 30.

சந்திராஷ்டமம் – 25-10-2021 பகல் 02.36 மணி முதல் 28-10-2021 அதிகாலை 03.05 மணி வரை.

தனுசு ராசிக்காரர்களுக்கு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் வளமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இவ்வாரத்தில் 10-ல் புதன், 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, அனுமன் துதிகளை பாடி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27.

சந்திராஷ்டமம் – 28-10-2021 அதிகாலை 03.05 மணி முதல் 30-10-2021 பகல் 12.50 மணி வரை.

மகரம் ராசிக்காரர்களுக்கு: உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.

சந்திராஷ்டமம் – 30-10-2021 பகல் 12.50 மணி முதல் 01-11-2021 மாலை 06.39 மணி வரை.

கும்பம் ராசிக்காரர்களுக்கு: அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, குரு சேர்க்கைப் பெற்று 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடனை பெறுவதில் சற்று இழுபறி நிலை உண்டாகும். விஷ்ணு வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30.

மீனம் ராசிக்காரர்களுக்கு: பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சனியுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தாராள தனவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலரின் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சோர்வு, கை கால் வலி, உஷ்ண உபாதைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். சிவ பெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து சிவ மந்திரங்கள் சொல்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.10.2021 Today Rasi Palan 25-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleமிதுனம் ராசிக்காரர்களுக்கான‌ குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022 உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்கள்!