யாழில் 17 தமிழர்கள் அதிரடியாக கைது!

0

கொழும்பில் திடீரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பெரும் நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு தொடர்ந்து வருகிறது.

இதனால் அரச இயந்திரங்கள் முடங்கியிருப்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்தாலும் முப்படைகள் தங்கள் கடமைகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் நேற்று நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இதன்போது 3 படகுகளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கடற்படையினரால் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரு படம் கூட இல்ல! விபரீத வேலையில் இறங்கி இருக்கும் அனுஷ்கா!
Next articleஓடி ஓடி உயிரை காப்பாற்றுபவருடைய உயிர் பரிதாபமாக பறிபோன சம்பவம்!