Home Jaffna News முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!

முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!

0
454

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கைக்கு அமைய புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 158.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 154.34 ரூபாவாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி 2 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே காலப்பகுதியில் யூரோவின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஜப்பான் யென் ஒன்றின் பெறுமதி 7.1 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் 21.4.2018!
Next articleஇலங்கை வந்த பாரிய விமானம்! ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?