Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கற்பழித்த கணவர் : வீடியோ எடுத்து மிரட்டல்!

நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கற்பழித்த கணவர் : வீடியோ எடுத்து மிரட்டல்!

0
495

உத்தரபிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்நாத். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச்சென்றார்.

பின்னர் அங்கு தயாராக இருந்த தனது நண்பர்கள் 2 பேருக்கு மனைவியை விருந்தாக்கினார். மேலும், அவர்களுடன் சேர்ந்து பிரேம்நாத்தும் தனது மனைவியை கற்பழித்தார். இந்த கொடூர காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டினர்.

இந்த நிலையில், அந்த பெண் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்நாத்தை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கற்பழிக்கப்பட்ட பெண் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Previous articleதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் தங்க ஷூ அணிந்த மணமகன்!
Next articleபெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னருக்கு கண்டனம்!