யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் பிடிபட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளது.
மீனவருடைய வலையில் சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன் அகப்பட்டுள்ளது. இந்த மீனின் இன்றைய சந்தை பெறுமதி 1 1/2கோடி ரூபாய் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இன்று குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான அதிஷ்டம் மீனவர்களுக்கு எப்போதாவது, கிடைப்பதாகவும் இவ்வாறாக மீன் பிடிபடுவது ஆச்சரியம் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: