கடவத்தையில் உயிரிழந்த இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டி போன்று வடிவமைக்கப்பட்ட சமாதியில் புதைக்கப்பட்டுள்ளார்.
திஸர ஹேஷான் என்ற இளைஞன் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் இணைந்து இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த இளைஞன் தனது முச்சக்கர வண்டியை அதிகமாக நேசித்துள்ளார்.
அதற்கமைய அவருக்காக நண்பர்கள் இணைந்து முச்சக்கரவண்டி ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டி வடிவத்தில் சமாதி ஒன்றை தயாரித்த நண்பர்கள் அதில் அந்த இளைஞனின் சடலத்தை வைத்து நல்லடக்கம் செய்துள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: