அண்மையில் துவங்கப்பட்ட பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிளை’.
இந்த நிகழ்ச்சியை பல மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்த காரணத்தால் மிகவும் அவசர அவசரமாக முடிக்கும் நிலையில் உள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.
கடந்த கிழமைகளில் இறுதி சுற்றுக்கு தெரிவான 5 போட்டியாளர்களினதும் வீட்டுக்கு ஆர்யா சென்றார்.
இது குறித்து இறுதி நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்டார். 5 போட்டியாளர்களின் வீட்டில் சுசானாவின் வீட்டுக்கு சென்ற தருணம் மறக்க முடியாத நேரம் என்று அவர் கூறியுள்ளார்.
இது ஆர்யாவிற்கு மட்டும் அல்ல, சுசானாவிற்கும் மிக பெரிய பரிசாக காணப்பட்டுள்ளது. ஏன் என்றால், சுசானாவும் 35 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனால், இந்த தருணம் மறக்க முடியாத தருணமாக இருந்ததாக ஆர்யா கூறியுள்ளார்.